கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் ் தெரிவித்துள்ளனர்.
தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய தெகட்டானை பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.