வடமாகாண தொழில்துறை திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து வடமாகாணத்திலுள்ள
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
பாரம்பரிய உணவு, நெசவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், மட்பாண்ட உற்பத்திகள்,
உள்ளூர் அழகுசாதன உற்பத்திகள், கைவினைப்பணிகள், பனம் சார் உற்பத்தி, மூலிகைவகை உற்பத்திகள் என 60 கூடாரங்கள் அமைக்கப்பட்டு இக்கண்காட்சி மற்றும் விற்பனைகள் இடம்பெற்றன.
அது மட்டுமன்றி மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை கலாசார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றிருந்தன.
அதன் முழுமையான விடயம் காணொளி வடிவில்…
https://www.youtube.com/embed/Qxk0kz07-qE