இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக (Rajarata University of Sri Lanka) வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல் செய்துள்ளார்.
இவர் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி அதிகார சபை
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) பணிப்பாளர் சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம்.ரணதுங்க (N.B.M. Ranatunga ) விலகியிருந்தார்.
இவர் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அதன்படி, 3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர் தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கது.