ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் திருத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மூன்று கட்டங்களாக திருத்தம்
அதன்படி 01.01.2020இற்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1இன் படி, 2020ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய சம்பள அளவுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக திருத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


