வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். சென் ஜோன்ஸ்
கல்லூரிக்கும் (St.John’s College) யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06.03.2025) காலை ஆரம்பமாகியது.
118 ஆவது ஆண்டாக இம்முறை இடம்பெறும் கிரிக்கெட் போட்டி 6,7,8 ஆம் திகதிகள் என
மூன்று நாட்கள் கொண்ட போட்டியாக இரண்டு இனிங்ஸ்களாக நடைபெறவுள்ளன.
ஜெயசந்திரன் அஸ்நாத் தலைமையிலான சென் ஜோன்ஸ் கல்லூரியும்,
ரஞ்சித்குமார் நியூட்டன் தலைமையிலான மத்திய கல்லூரியும்
களமிறங்கியுள்ளன.
நாணயச் சுழற்சியில் வெற்றி
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலில்
களத்தடுப்பை தீர்மானித்து.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மதிய நேர
இடைவேளை வரை25 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப்
பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அணி சார்பில் ஆர்.நியூட்டன் 24 ஓட்டங்களையும், எஸ்
.சிமில்டன் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கே.மாதுளன் 2 விக்கெட்டுகளையும்,
எம்.கிரிசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
முதலாவது பெண் அதிபர்
இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக ஊ.ளு.சு. செல்வகுணாளன் இன்று முதல் (06)
கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ் மத்திய கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் – பிரதீபன் மற்றும் கஜிந்தன்