பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையிலே, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவி செய்பவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை காணும் இடத்தில் வைத்து கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.