இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாப்பிட்டியவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின் பாவனையாளர் சங்கம் என்ற அமைப்பு இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையம்
திலக் சியம்பலாப்பிட்டிய, நீண்ட காலமாக தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
அவர் மின்சார சபையின் தலைவராக பொறுப்பேற்ற பின்னரும் குறித்த நிறுவனம் மின்சார சபையின் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
மின்சார சபையின் தலைவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனம், மின்சார சபையுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மோசடியான செயற்பாடாகும் என்றே மின்பாவனையாளர் சங்கம் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.