வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் காங்கேசன்துறை (Kankesanturai) பகுதியில் வைத்து கைது செய்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் (India) இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல் மூலம்
எடுத்து வந்துள்ளார்.
சிகரெட்டுகளுடன் கைது
அவர் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிவடைந்த பின்னர் வெளியே வந்த வேளை யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இவ்வாறு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

