முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   

புலமைப்பரிசில் விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே (A.K.S. Indika Kumari Liyanage) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல் | Grade 5 Scholarship Exam Date Examination Dept

அதற்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன என்றும், பரீட்சை மத்திய நிலையங்கள், பரீட்சை வினாத்தாள்கள், மற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை பின்வருமாறு,

நேர அட்டவணை

II, ஆம் வினாப்பத்திரம் – 09.30 – 10.45 மணி

I ஆம் வினாப்பத்திரம் – 11.15 – 12.15 மணி

மேற்படி பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்

இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல் | Grade 5 Scholarship Exam Date Examination Dept

இதுவரையில் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபர்கள் www.doenets.lk இற்குப் பிரவேசித்து ‘எமது சேவை’ இன் கீழுள்ள Exam Information Centre’ இன் மீது சொடுக்குவதன் மூலமோ அல்லது http://onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதன் மூலமோ அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அங்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் 2025 ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத்தருகின்றேன் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் :-

தொலைபேசி இலக்கங்கள் : 011-2784208, 2784537, 2786616, 2785413

துரித அழைப்பு இலக்கம் : 1911

தொலைநகல் இலக்கம் : 011-2784422 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.