முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நகர சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கண்டி, யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில்  பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் சமையலறைக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியின் அருகில்  அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பின்னணி

தில்ருக்ஷி ஜெயலத் குமாரகே என்ற 45 வயதுடைய மனைவிக்கும் 17 வயதுடைய ஷிஹாரா அஷின்சானி ஹபுகோடா என்ற மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நகர சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் | Opposition Leader Dies And Kills Family In Kandy

சம்பவத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தின் இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்றிருந்தார். அவர் இரவில் வந்திருந்தார். சம்பிக்க நிலந்த பாடசாலையில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

எனினும் அதற்குள், அவர் ஏற்கனவே தனது மனைவியையும் மற்ற மகளையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனது இளைய மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர், அவரை கொல்லும் நோக்கத்துடன் மாடிக்குச் சென்றிருந்தார், ஆனால் மகள் அந்த நேரத்தில் உறங்காததால் முடிவை கைவிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலில் நுழைந்து சிறிது காலம் யட்டினுவர பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய சம்பிக்க நிலந்த, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

வட்டிக்கு பணம்

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்று யட்டினுவர பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.

மார்ச் மாதம் தனது காரை விற்று, தான் வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் | Opposition Leader Dies And Kills Family In Kandy  

அன்றிலிருந்து அவர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு வழங்க 5 லட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் நெருங்கிய உறவினரான மினெல் ஹப்புகொட என்ற பெண் தகவல் வழங்கியுள்ளார்.

“உயிரிழந்தவர்கள் எனது சித்தியும் சித்தப்பாவும் அவரது மகளுமாகும். மிகவும் அன்பாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக, சித்தப்பா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்.

நகர சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் | Opposition Leader Dies And Kills Family In Kandy

அவர் ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதை என் தந்தையும் அறிவார். ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.