பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பில் சமீபத்தில் ஒரு ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஹரிணி அமரசூரிய அந்த இடத்திலிருந்து சென்று விட்டார்.
எனினும், அதன் பின்னர் குறித்த ஊடகத்திற்கு ஹரிணியின் அலுவலகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.
இதன்போது, ஹரிணி வழங்கிய பதில், வேறு விதமாக கையாளப்படலாம் எனவும் அதனை மீள்பரிசீலனை செய்து வெளியிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது ஊடகம் சார்பாக கேள்வி எழுப்பியவருக்கு இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், விமானத்தின் விஐபி இருக்கையில் பயணிக்கமால் சாதாரண இருக்கையில் பயணித்துள்ளார்.
அது தொடர்பாகவும் இந்திய உளவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
இங்கு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஐபி இருக்கையில் செல்லாமல் இருந்ததை விட இந்தியா அதனை அவதானித்திருப்பது ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

