2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக மட்டும் ஆயிரத்து 809 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது
குறித்த விடயம் நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி
அத்துடன், இலங்கை சுங்கம் ஊடாக ஆயிரத்து 970 பில்லியன் ரூபாவும், மதுவரித்திணைக்களத்தின் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

