சம்மாந்துறையில் சகோதரனுடன் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின்
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை – சம்மாந்துறை
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (9)
சிறுவன் தனது சகோதரனுடன் விளையாடிய நிலையில் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த
நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த விபத்தில் 2 வயதுடைய
சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

இறந்த சிறுவனது
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவின் பேரில் திடீர் மரண
விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம்
செவ்வாய்க்கிழமை (9) மாலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





