அம்பாறை – மத்திய முகாம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் தீவிரம் அடைந்தமையினால் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிணவறையில் சடலம்
உயிரிழந்தவர் வீரகொட பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய முகாம் மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

