இலங்கையில் கடந்த 11 மாதங்களில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வழக்குகள்
இதன்படி பதிவான வழக்குகளில் 35 வழக்குகள் சிறுவர்களை உள்ளடக்கியுள்ளதாக சாருக்க தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சிறுவர்களை இணையக் குற்றங்கள் தொடர்பான அபாயங்களிலிருந்து பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

