யாழ்.சுன்னாகப் பகுதியில் 180 லீற்றர் கோடா போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட
சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா 180
லீற்றர் கசிப்பு உற்பத்தி செய்யும் பாழடைந்த வீட்டில் இருந்தே பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது உடுவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர்
ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

