இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வர முயன்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசியாவை சேர்ந்தவர் எனவும் அவர் அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் நடத்திய சோதனை
விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு 250 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

