யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும்
கஞ்சா போதைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (26) நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நான்கு ஆண்களும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒரு
பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
மில்லிகிராம் மற்றும் கிராம் அளவில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில்
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து, சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

