கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை
இதனடிப்படையில், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அனைத்து முனையங்களின் செயற்பாடுகளும் துறைமுக அதிகார சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரமாக மக்கள் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

