“டித்வா” புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால் இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது.
“இந்த சவாலான தருணத்தில் இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது” என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை இந்தியா அனுப்பியுள்ளது.
இலங்கை விமானப்படை
80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான இந்திய விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது.
இதேவேளை, இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இன்று (29) காலை இலங்கையை வந்தடைய உள்ளது.

