சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர்
பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ்.பொன்னாலை கடலில் கடற்றொழிலாளி ஒருவர்
உயிரழந்துள்ளார்.
நேற்று(29.11.2025) மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற நிலையில்
காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகு கிருஷ்ணமூர்த்தி எனும் கடற்றொழிலாளியின்
சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி
சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக
அதிகரித்துள்ளது.

