கொழும்பின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது.
சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த சில தினங்களில் நாட்டில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
மக்களே அவதானம்..
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதியில் மழையற்ற காலநிலை நிலவி வந்தது.

எனினும், இன்று மாலை முதல் கொழும்பின் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.
எனவே, ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.





