நாட்டில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மூதூர் பகுதியில் சேதமடைந்த கிணறுகளை இலவசமாக இறைத்து வீடுகளையும் சுத்தம் செய்வதற்காக இளைஞர் அணி களத்தில் இறங்கியுள்ளனர்.
மூதூர் பகுதியில் மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இயற்கையின் சீற்றத்தால் இடம்பெயர்ந்திருந்த பலரும் தத்தமது சொந்த வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
சேதங்கள்
எனினும், வீடுகள் மற்றும் கிணறுகள் என பலதும் சேதமடைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், இளைஞர்களின் பங்களிப்புடன் இன்று
(04.12.2025) பல வீடுகள் மற்றும் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





