கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (20) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான 8 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
நீர் வெட்டு
அந்தவகையில் பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ.

மற்றும் ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

