சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முன்னாள் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணையின் போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று (19.12.2025) கைது செய்யப்பட்டார்.

துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த தங்க ஆபரண கடை உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் அதிகாாிகள் திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி விசேட புலனாய்வு குழு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நேற்று (19.12.2025) முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

