ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எழுதவிருக்கும் மாணவர்களின் இருப்பிடம் மாறியிருந்தால், அது தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
அனுமதி அட்டைகள்
இது குறித்து 0112-784537 மற்றும் 0112-788616 என்ற எண்களில் தொடர்பு கொண்டும்ட
பரீட்சைகள் திணைக்களத்திற்குத் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக பரீட்சை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் அழிந்திருந்தால் உடனடியாக அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

