போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை
சந்தேகநபரிடமிருந்து 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

