கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
அந்த வகையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
கிறிஸ்மஸ் ஆராதனைகள்
இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டது.








