அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் (New Orleans) புத்தாண்டு தினத்தன்று மக்கள் கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கோர விபத்தில் 30 பேர் வரை காயமடைந்துள்ளதோடு, விபத்து ஏற்படுத்திய SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஓர்லியன்ஸில் உள்ள போர்பன் வீதி மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது.
இதைத் தொடர்ந்து, சாரதி ஒருவர் வாகனத்தை விட்டு வெளியேறி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்டுள்ளதுடன், குற்றவாளி குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஓர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும்.
மேலும், போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது.
Source: https://tamilwin.com/article/america-new-year-accident-1735735297

