யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகானது, இன்றைய தினம்(09) இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
படகு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.




