சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு அரசியல் கட்சியின் செயலாளர் பதவியை வகித்த ஒருவரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய பிக்கு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், கடத்தப்பட்ட நபர், சம்பவம் குறித்து முறைப்பாடளிக்க அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்து திரும்பி வந்தபோது கடத்தல் நடந்ததாக பாதுகாப்புப் படையினரிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.
நீண்ட விசாரணை
அதன்படி, இதைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பந்தப்பட்ட பிக்கு மற்றும் பலர் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.


