பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியில் உள்ள பெட்டிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று (09) பிற்பகல் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட நபர் பலபிட்டிய, மஹலதுவ பகுதியைச் சேர்ந்த பெட்டா என்ற நபர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
இவர் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனவின் கொலையில் முக்கிய சந்தேக நபர் என்றும், அவர் இன்று (9) பலபிட்டிய நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனைதொடர்ந்து, நீதிமன்றில் இருந்து வாடகை முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைச் சுட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்வபம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

