ஹிக்கடுவை மாவத்தகம பகுதியில் வீடொன்றின் மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சுமார் 4 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், வீட்டின் சுவர் மற்றும் ஜன்னல் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.