முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் விநோதமான முறையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்..!

மன்னார் (Mannar)  நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம்
கிராமத்தில் உள்ள வீடொன்றில் விநோதமான முறையில்  திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவன் ஒருவருடன் பெண் ஒருவர்
அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில்
இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) காலை 9.30 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு நிதி சேகரிப்பு

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் பெண்
ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில்
அவர்கள் பணத்தை கொடுக்க குறித்த இருவரும் குடிக்க நீர் கேட்டுள்ளனர்.

மன்னாரில் விநோதமான முறையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்..! | A Strange Incident Of Theft In Mannar

அவர்கள் குடிக்க நீர் கொடுத்த வேளையில்,  தான் சாத்திரம்
பார்ப்பதாகக் கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம்
பார்த்துள்ளார்.

சிசிரிவி வீடியோ காட்சி

இதன்போது வீட்டில் இருந்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து
பூசிய நிலையில், அந்த பெண்
அணிந்திருந்த சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச்
சென்றுள்ளார்.

மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த
விடயம் தெரிய வந்துள்ளது.

மன்னாரில் விநோதமான முறையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்..! | A Strange Incident Of Theft In Mannar

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில்
வீதியால் சென்ற சிசிரிவி வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.