முல்லைத்தீவு (Mullaitivu) – வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் இன்று (10) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகிய இளைஞன் அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து பலியாகியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
குறித்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

