ரூ.1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயில் இருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
கொழும்பு கிராண்ட் பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவரே கைது செய்யப்பட்டவராவார்.
தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ நகைகள்
அவரிடம் 195 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ நகைகள் இருந்நதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

