வடக்கு மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவது தொடர்பாக தொடருந்து திணைக்களம் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் (Jaffna), காங்கேசன்துறை – அனுராதபுரம் இடையே தொடருந்து சேவைகள் (22) நாளை முதல் மீண்டும் தொடங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனரமைப்பு பணிகள்
அந்தவகையில், தொடருந்து அனுராதபுரத்திலிருந்து மாலை 2.30 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திங்கள் 22 ஆம் திகதி முதல் வழமை போன்று காங்கேசன்துறையில் இருந்து காலை 6 மணிக்கு அனுராதபுரம் நோக்கி புறப்படும்.
எனினும், தாண்டிகுளம் தொடருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக தொடருந்து நிறுத்தப்படாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

