Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி மாவட்டத்தில் 3865பேர் தபால் மூலம் வாக்களிக்க
தகுதிபெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை
முதல் (24) இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி
,கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைக்காக. தபால் மூலம் 3865பேர்
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிக்க தகுதி
உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி
மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் மூன்று
சபைகளுக்கும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாகவும்
தெரிவித்துள்ளார்.

