நாட்டிலே கடற்படையிடம் மாத்திரம் அல்லாது விமானப் படையிடமும் பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவிலே இலங்கை கடற்படை தளத்திற்கு அருகில் ஜோசப் வதை முகாம் ஒன்று இருந்துள்ளது.
அங்கே இராணுவம் மட்டுமல்ல விமானப்படையும் முழுமையாக சித்திரவதை நடவடிக்கைகளில் அக்காலப்பகுதியில் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையிலே தமிழ் மக்களை அழிப்பதற்கு கடற்படை, விமானப்படை, இராணுவம், பொலிஸ் என கூட்டாக இணைந்து செயற்பட்டார்கள்.
ஆகவே இது ஒரு உலகம் அறிந்த தெளிவான இனப்படுகொலை என்பதற்கான ஆதாரமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…