அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வசித்து வந்த கல்னேவ பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு
இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்காக வீடுகள் சோதனையிடும் போதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.