கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்காக அரசியலமைப்புச் சபை எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த பதவிக்கான தகுதியான ஒருவரின் பெயர் ஜனாதிபதியால் எதிர்வரும் சில நாட்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கணக்காய்வாளர் நாயகம் பதவியிலிருந்த டபிள்யூ. பி.சி. விக்ரமரத்ன, கடந்த 8ஆம் திகதி ஓய்வுபெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
இரு சிரேஷ்ட அதிகாரிகள்
தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் (National Audit Office) சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில், அவர்களில் ஒருவரை இந்த உயர் பதவிக்கு நியமிக்க வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் இந்த கணக்காய்வாளர் நாயகம் பதவி, இலங்கை அரச சேவையின் மிக முக்கியமான மற்றும் உயரிய பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இது பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் அதன் மிகப்பெரிய மற்றும் முக்கிய பங்குகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

