இலங்கை இராணுவத்தின் 76ஆவது ஆண்டு
நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வு நேற்றையதினம்(10) நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த
தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர்.
இரத்ததானம்
முல்லைத்தீவு மாவட்டத்தில்
உள்ள நோயாளிகளின் நலனையும் கருத்தில் கொண்டும் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை
வைத்தியசாலையின் முக்கியமான சூழ்நிலையில் இந்த நிகழ்வை இராணுவத்தினர் நடத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர்
சசினி விஜயரத்ன , வைத்தியர் எஸ்.டீ.சமரசிங்கவின் பரிசோதனையின் கீழ் , 100
இரத்த தானம் செய்பவர்களின் பங்கேற்புடன்
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் இரத்த தானம்
வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு 59ஆவது காலாட்படை பிரிவின் வழிகாட்டுதலின் இராணுவ முகாம்களுக்கு
கீழுள்ள குறித்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் 59ஆவது காலாட் படை தலைமை
செயலகம், 591ஆவது படையணி தலைமை செயலகம், 12ஆவது இலங்கை இராணுவ காலாட் படை, 10ஆவது
சிங்ஹ படையணி, 5ஆவது சிங்க படையணி, 14ஆவது கெமுனு ஹேவா படையணி, 593ஆவது படையணி
தலைமை செயலகம், 6ஆவது கெமுனு ஹேவா படையணி , 6ஆவது தேசிய பாதுகாப்பு படையணி போன்ற
படையணியை சேர்ந்த இராணுவத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை
வழங்கியிருந்தார்கள்.





