தேசிய மக்கள் சக்தி (npp)அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல(ashoka rangwalla),அந்தப் பதவியிலிருந்து விலகி இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்றன.
அவர் பதவி விலகல் செய்ததற்கான காரணம், அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் முனைவர் பட்டம் தொடர்பான சர்ச்சையாகும்.
பட்டப்படிப்பு சான்றிதழுக்காக துறக்கப்பட்ட பதவி
டிசம்பர் 13 ஆம் திகதி அவர் பதவி விலகியிருந்தார். எதிர்காலத்தில் தனது பட்டப்படிப்பு சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
ஆனால் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன, இன்னும் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.
ஜப்பானில்(japan) உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகக் கூறியிருந்தாலும், அவர் இதுவரை இரண்டிலிருந்தும் எந்த பட்டச் சான்றிதழையும் சமர்ப்பிக்கவில்லை.