அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஓகஸ்ட் மாதத் தவணைக்கான பணம் இன்று (27.08.2025) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

