இன்று (30) மகாவலி கங்கையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் காரணமாக, எருமைகள்,
மான்கள் மற்றும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வெள்ள நீரில் அடித்துச்
செல்லப்பட்டன.
மனிதாபிமான அடிப்படையிலும், காட்டுயிர்கள் மீதான அக்கறையுடனும் செயற்பட்ட
மக்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து, வெள்ளத்தில் சிக்கித் தவித்த பல
மிருகங்களை ஆபத்தான நிலையில் மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாப்பான
பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
ஆயினும், சில மிருகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு
உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

