யாழில் 10 போதைமாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது
செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை
செய்ய வந்தவேளை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

