வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை படிப்படியாகக் குறைக்க அரசுக்கு முடிந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க கூறுகிறார்.
அரசின் அதிக கடன்
கடந்த ஆண்டில் அரசாங்கம் அதிக அளவில் கடன் வாங்கியதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான்மை என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் துனுசிங்க,

சர்வதேச நிதிச் சந்தைகளில் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான அணுகல் குறைவாக இருப்பதால் அரசாங்கம் முக்கியமாக உள்நாட்டு மூலங்களிலிருந்து கடன் வாங்க வேண்டியுள்ளது.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அரசாங்கம் அதிகமாக கடன் வாங்கியதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை, மாறாக, பட்ஜெட் பற்றாக்குறை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
Source: https://tamilwin.com/article/budget-deficit-has-decreased-1762259256

