முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இறுகும் யோஷித மீதான பிடி : ஒருமாத காலத்திற்குள் பாயப்போகும் வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (mahinda rajapaksa)மகன் யோஷித ராஜபக்ச(yoshitha rajapaksa),இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பான குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (27) அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (harshana nanayakkara)இன்று தெரிவித்துள்ளார்.

 பிணை வழங்குவதனால் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை

யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை எனவும் பிணைமுறி சட்டத்தின் விதிகளின் பிரகாரம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறுகும் யோஷித மீதான பிடி : ஒருமாத காலத்திற்குள் பாயப்போகும் வழக்கு | Case Against Yoshitha Within A Month

கடந்த அரசாங்கங்களைப் போன்று அரசாங்கம் செயற்படுவதாகவும், யோஷித விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுவதாகவும் சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் அகலப்போகும் சந்தேகங்கள்

“இந்த சந்தேகங்கள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்னும் ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும்,” என்றார்.

இறுகும் யோஷித மீதான பிடி : ஒருமாத காலத்திற்குள் பாயப்போகும் வழக்கு | Case Against Yoshitha Within A Month

இந்த சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சந்தேக நபராக அவர் பெயரிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் சந்தேக நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என அவர் மேலும் கூறினார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.