மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19.12.2025) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22.12.2025) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

