இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பை தொடர்ந்து பொதுமக்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை ஐந்து நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(17) மின்சார சபை தலைமையகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலைமையகத்துக்கு முன் ஒன்று கூடிய ஊழியர்கள்
மின்சார சபை தலைமையகத்தில் ஒன்றுக் கூடிய அனைத்து ஊழியர்களும் இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பை எதிர்த்தும் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமையகத்துக்கு முன் ஒன்று கூடிய ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

